×

லைகா நிறுவனத்துக்கு பணத்தை ஏன் தரவில்லை? நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: லைகா நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் தாக்கல் செய்த வங்கி பரிவர்த்தனையின்படி 80 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், மெமோவிற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பணத்தை ஏன் இன்னும் திரும்ப செலுத்தாமல் இருக்கிறீர்கள், செலுத்த வேண்டியது தானே என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், பணத்தை செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம். லைகா தரப்புதான் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post லைகா நிறுவனத்துக்கு பணத்தை ஏன் தரவில்லை? நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Laika ,ICourt ,Vishal ,CHENNAI ,Vishal Bhat ,Dinakaran ,
× RELATED லைகா, நடிகர் விஷால் இடையே நடந்த...